உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை
எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு. இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு. இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் . ஏனென்றால் முதன்முதலாய் தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன். சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன். பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது. எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை. அழுகை கலந்த பயம். எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன். இந்த மேடையில் ஒரு கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார். இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பே