Posts

Showing posts from December, 2018

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது. அதற்கான சான்று. சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள். நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள். நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள். மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள். ஆனால். இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான். ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார். ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது. அறிவியல் முதல் ஆன்மீகம் வரை பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்... பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும். பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு. பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்த

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா. மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது. இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.
Image
கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம். எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார். அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள். அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார். இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார். உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார். அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது. இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மேலும்

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம். ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.

ஆறிலிருந்து அறுபது வரை

Image
நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள். நாம் மெல்ல மெல்ல நடப்போம். எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மை கவனிப்பார்கள். ஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன். நாம் வளர்ந்திருப்போம். அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌. நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை அவர்களை திட்டுகிறோம். இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம். ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன். நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யோசித்துப் பாருங்களேன். இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம். ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம் சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த சமுதாயம் முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது. சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது. வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று. இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால் பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும். இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே. எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்... ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர். ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர். அன்று தொழில் சாதியாய் மாறியது. இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என