Posts

Showing posts from September, 2018

கிராமம் அது சொர்க்கம்...

Image
எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது... சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்... எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி... காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ.. மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு... தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு... லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌. சந்தைக்கு போகும் அவசியமில்லை.. காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்... மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்... சத்து மாத்திரைகள் தேவையில்லை. அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன... ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...  அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை... வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.  அண்டை வீட்டாரிடம...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

Image
நாம் ஒரு செயலிலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெற்று விட்டோம் என்றால் அந்த வெற்றிக்கு நான் இப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன். நான் அப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன் என்று அந்த வெற்றிக்கு நாம் தான் காரணம் என மார்தட்டி பெருமைப் படுகிறோம்... இதுவே தோல்வியைத் தழுவி விட்டோம் என்றால் அதனால் தான் நான் ஜெயிக்கல இதனால் தான் நான் ஜெயிக்கல அவுங்க இப்படி பன்னிட்டாங்க இவுங்க இப்படி பன்னிட்டாங்க என அந்த தோல்விக்கு காரணமாய் பிறரைக் காட்டுகிறோம்... அது எப்படி நம் வெற்றிக்கு நாம் காரணமாய் இருக்கும் போது நம்முடைய தோல்விக்கு மட்டும் பிறர் காரணமாய் இருப்பார்கள்..... தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நா காக்க

Image
சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் செய்த சின்னஞ்சிறு செயல்கள் கூட பிறரை மிகவும் காயப் படுத்தும்... விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு இடையில் சண்டை வந்துவிட்டது... அந்த சண்டையின் உச்சகட்டமாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.. நான் தான் நம்ம அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீ தத்துப் பிள்ளை என்கிறது... இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை வேதனைப் படவும் இல்லை.. வருத்தப்படவும் இல்லை... பெருமிதத்தோடு சொல்கிறது.. பெத்த பிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா.... பெற்ற பிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள்.. தத்துப் பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள்.. என்று கூறியது... அந்த குழந்தை இந்த வார்த்தைகளை மனதார சொல்லியிருந்தாலும் கூட அந்த மழலையின் அடிமனதில் அது கடினத் தன்மையையும் ஏக்கத்தையும் அல்லவா ஏற்படுத்தியிருக்கும்... பிறர் மனதை காயப்படுத்தாமல் பேசுபவர் யாரோ அவரே பிறரால் மதிக்கப் படுவார்கள். நேசிக்கப் படுவார்கள்... நா காக்க...

அன்புள்ள ஆசானுக்கு

Image
ஆசிரியர் தின விழாவிலே எங்கள் கல்லூரி முதல்வருக்காய் நான் எழுதி அவர் முன் அரங்கேற்றம் செய்த என் கவிதை...  கமல்ஹாசனுக்கு அடுத்து பல முறை தசாவதாரம் எடுத்தவர் நீங்கள் தான்‌... தாய் தந்தைக்கு மகனாய்... மனைவிக்கு ஏற்ற கணவராய்... மகனுக்கும் எங்களைப் போன்ற மகள்களுக்கும் தந்தையாய்... ஆசிரியர்களுக்கெல்லாம் நண்பணாய்... ஆசிரியைகளுக்கெல்லாம் அண்ணணாய்... தாளாளருக்கு தனயனாய்... துணைத் தாளாளருக்கு தளபதியாய்... புத்தகங்கள் எழுதிட்ட எழுத்தாளராய்... கவி புனையும் கவிஞராய்..கலைஞராய்... திரையில் நடிக்க தெரிந்த நடிகராய்... மலரினும் மெல்லிய இதயம் படைத்திட்ட நல் இதயங்களே எனத் தொடங்கி பேச்சால் கட்டிப் போடும் பேச்சாளராய்... பல அவதாரம் எடுத்திட்டவரே... அவதாரங்கள் தொடரட்டும்... அன்பு பெருகட்டும்... ஆயுள் நீளட்டும்... பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் அறியாமை இருளகற்றும் பணி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா....